நான்கு நாட்களாக தலைவர் ரஜினியை கடுமையாக விமர்சித்தவர்கள், இப்போது என்ன செய்யப் போகிறார்கள்?
ரஜினி அரசியலுக்கு வருவதாக சொன்னபோது அவர் பிஜேபியின் ஏஜென்ட் என விடாமல் பரப்பியது இங்குள்ள மீடியா. அப்போதும் இந்த ஷபீர் போன்ற பத்திரிக்கையாளர்கள் அந்த பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகித்தார்கள்.
இப்போது விஜய் கட்சி பெரும்பான்மைக்கு திணறிக் கொண்டிருந்தபோது, ஸ்டாலினை ரஜினி நட்பு ரீதியில் தேர்தல் தோல்விக்கு ஆறுதல் சொல்ல சந்தித்ததை வைத்து "விஜய் ஆட்சி அமைப்பதை தடுக்க ரஜினி செயல்படுகிறார், திமுக - அதிமுக கூட்டணிக்கு பிஜேபி சொல்படி தூது போகிறார்" என்று பரப்பினார்கள்.
உண்மையில் திமுக - அதிமுக கூட்டணியை கொண்டுவர வேண்டும் என்றால் அதற்கு ரஜினி அவசியமே இல்லை.
ஏற்கனவே மோடியின் கூட்டணியில் EPS இருக்கிறார். ஸ்டாலினுக்கும் மோடிக்கும் பகை என்று கிடையாது, அவர்களுக்குள் இருப்பது கருத்தியல் மோதல் மட்டுமே. ஸ்டாலின் ஆட்சியில் அரசு நிகழ்ச்சிகளுக்கு மோடி தமிழகம் வந்தபோதெல்லாம் ஸ்டாலினும் மோடியும் முகமலர்ச்சியோடு உரையாடி இருக்கிறார்கள்.
கலைஞரின் 100ம் ஆண்டு நினைவு நாணயம் வெளியீட்டுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வந்தார். கலைஞர் சமாதிக்கே பிஜேபி குழு சென்றது.
இப்படிப்பட்ட அரசியல் கடந்த நட்பான சூழலில், "திமுக ஆதரவில் அதிமுக அரசு" என்றால், அதை மோடி நேரடியாகவே ஸ்டாலின், EPS இருவரிடமும் பேசி முடித்திருக்க முடியும். அதற்கு ரஜினியின் தூது அவசியமே இல்லை.
என்றாலும், ரஜினி மீது வன்மம் கொண்ட பத்திரிக்கையாளர்கள் கடந்த நான்கு நாட்களில் ரஜினி மீது ஆதாரமற்று பழியை சுமத்திக்கொண்டே இருந்தார்கள்.
ஆட்சிக்கு தேவையான மெஜாரிட்டியை உறுதி செய்ய விஜய் திணறுவதை மறைக்க ரஜினி பக்கம் focus செய்தார்கள். வழக்கமாகவே ரஜினி எதிர்ப்பு ஆக்ஸிஜனில் வாழும் விஜய் ரசிகர்கள் இந்த பழி சுமத்தலை இன்னும் பெருக்கி பரப்பிவிட்டார்கள்.
இப்படி பரப்பப்படும் அவதூறுகளுக்கும், திட்டமிட்ட பிம்ப சிதைப்பு செயல்களுக்கும் காலம் பதில் சொல்லுமா என்பது காலத்துக்கே வெளிச்சம்.





கருத்துகள் இல்லை